இந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை!

by Editor / 01-05-2021 05:03:05pm
இந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை!

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் தற்காலிக ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி பவுசி யோசனை தெரிவித்துள்ளார். இந்திய அரசு சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தற்போது, இந்தியா கடுமையான மற்றும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறது. நாடு முழுவதும் தற்காலிகமாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை உடனடி தேவையாக பெற்று, அதனை விநியோகிக்க வேண்டும் என கூறினார்.

இந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை. பரவலை தடுக்க தற்காலிக ஊரடங்கை பிறப்பித்தாலே போதுமானது, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் என கூறினார். அரசாங்கத்தின் பல்வேறு துறைகளையும் மத்திய அரசு அணி திரட்ட வேண்டும். இந்த நேரத்தில் ராணுவத்தின் மூலம் நாம் என்ன உதவியை பெற முடியுமோ அதனை பெற வேண்டும் என கூறினார்.

 

Tags :

Share via