விழாவிற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

by Admin / 25-12-2021 11:50:09am
விழாவிற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஒடிசா மாநிலத்திலும் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஓட்டல்களில் கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் 50 பேருக்கு மட்டுமே இன்று அனுமதிக்கப்படுவார்கள்.

 
இரவு கொண்டாட்டங்களுக்கு முற்றிலும் தடை  விதிக்கப்படுவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. சமூகக் கூட்டம், இசைக் குழுக்கள், நடனம் மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

 

Tags :

Share via