அழுகிய முட்டைகளை சத்துணவில் வழங்கிய மூவரையும் பணி இடை நீக்கம்

by Admin / 25-12-2021 11:29:30pm
அழுகிய முட்டைகளை சத்துணவில் வழங்கிய  மூவரையும் பணி இடை நீக்கம்

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை அருகே நாகனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு முட்டை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்ததாகவும், முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியதாகவும் பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். 

அழுகிய முட்டைகளை சத்துணவில் வழங்கியது குறித்து பெற்றோர் அளித்த புகாரைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் நேரடியாக ஆய்வு மேற்கண்டு ,பள்ளி தலைமையாசிரியர்,இரண்டு சத்துணவு பணியாளர்
ஆகிய மூவரையும் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via