மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு ராஜினாமா!

by Editor / 13-05-2021 02:34:58pm
மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு ராஜினாமா!

கமீலா நாசர், மகேந்திரனை அடுத்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா குறித்து , ''அன்பர்களே, மக்கள் நீதி மய்யத்தில் நான் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பினையும் ராஜினாமா செய்கிறேன். எனது இந்த முடிவு தனிப்பட்ட காரணங்களால் எடுத்த முடிவு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கமல் மற்றும் எங்கள் குழுவினரின் பாசத்திற்கும் நட்பிற்கும் நன்றி.'' என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via