கிறித்துவ ஆலயங்களில் குருத்தோலை விழா
கடந்த மாதம் தொடங்கிய கிறித்துவர்களின் புனிதமான சாம்பல் புதனிலிருந்து தொடங்கிய தவக்காலம்,இன்று குருத்தோலை நிகழ்வுடன் வெகுவிமரிசையாகக்கொண்டாடப்பட்டது.தமிழகத்திலுள்ள கிறித்துவ ஆலயஙகளுக்கு கிறித்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலமாக வந்தனர்.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் கொண்டாட படாத விழா இப்பொழுது வெகு சிறப்பாகக்கொண்டாடி வருகின்றனர்.குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஏசுவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம்
Tags :