பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து

by Staff / 13-04-2022 04:44:25pm
 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி விலை ரூ.225 ஆக குறைக்கப்பட்ட நிலையில் எங்களிடம் 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன என ஆதர் பூனாவல்லா கூறியுள்ளார்.

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவுகின்றன.

கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 10ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து அதன்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.

 

Tags :

Share via