ரயிலில் துப்பாக்கிய தவறவிட்ட முன்னாள் காவல் அதிகாரி பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே ஊழியர்

by Staff / 23-04-2022 03:32:06pm
ரயிலில் துப்பாக்கிய தவறவிட்ட முன்னாள் காவல் அதிகாரி பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே ஊழியர்

 முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பொன் மாணிக்கவேல் ரயிலில் தவறவிட்ட துப்பாக்கியை ரயில்வே ஊழியர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சென்னையிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பொன்மாணிக்கவேல் ஈரோடு சென்றபோது அவர் வைத்திருந்த துப்பாக்கியை ரயிலில்  தவற விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரயில்வே ஊழியர் துப்பாக்கியே  ஸ்டேஷன் மாஸ்டரிடம் அளித்ததை அடுத்து துப்பாக்கி இரும்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வாளர் அளித்த தகவலின்பேரில் நேரில் வந்த முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பொன்மாணிக்கவேல் தவறவிட்ட துப்பாக்கியை பெற்றுக் கொண்டார்.

 

Tags :

Share via