இந்நாள் அமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் சவால்

by Editor / 11-10-2022 10:16:19am
இந்நாள் அமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் சவால்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் துவங்கி 20 ஆண்டுகள் முடிந்த பின்னும் தங்க நாற்கர சாலைப்பணிகள்  இன்னும் முடியவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறார்கள்.இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது கடந்த வாஜ்பாய் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட தங்க நாற்கர பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னும் நிறைவடையாமல் இருக்கிறது. அதற்கு மாநில அரசின் மந்தன போக்கு தான் காரணம். நான் அமைச்சராக இருந்தபோது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள், அமைச்சர்களை நேரில் பலமுறை சந்தித்து தங்க நாற்கர பணிகளை வேகப்படுத்தினேன். , தேவையான இடங்களில் அதிக நிதியை பெற்றுக் கொடுத்தேன். அவ்வாறு செய்யாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்யாமல் மத அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி பணிகளை செய்வதற்கான வழிமுறைகள் தெரியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யட்டும். மூன்று மாத காலத்தில் தங்க நாற்கர பணிகள் மற்றும் அனைத்துப் பணிகளும் வேகமாக நடக்கும் என தெரிவித்தார். மேலும் கனிம வளம் கேரளாவுக்கு கொண்டு செல்வது உட்பட அனைத்து விஷயங்களை பற்றியும் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் மாநில அமைச்சர் மனோதங்கராஜ்க்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சவால் விட்டார்.

 

Tags :

Share via