காரை வழிமறித்து ஆத்திரத்தில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்

by Staff / 04-05-2022 03:37:08pm
காரை வழிமறித்து ஆத்திரத்தில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்

ஆந்திராவில் காரை தடுத்து நிறுத்திய ஆத்திரத்தில் போக்குவரத்து காவலர் சரமாரியாக தாக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேற்கு கோதாவரி மாவட்டம் பின் பகுதியில் காவலர் குமார் என்பவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக காரை ஓட்டி வந்த ஸ்ரீ்நிவாசாஎன்பவரிடம் காரை நிறுத்தச் சொல்லி போக்குவரத்து காவலர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சிறிது தூரம் சென்று காரை நிறுத்தி ஸ்ரீநிவாஸ் தம்மீதான வேகத்தில் வந்ததாக கூறி போக்குவரத்து காவலர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாஸ் போக்குவரத்து காவலர் சரமாரியாக தாக்கி இருக்கிறார். பதிலுக்கு போக்குவரத்துக் காவலர் அவரை தாக்கியுள்ளார் இதில் போக்குவரத்து காவலர் லேசான காயமடைந்த நிலையில் கார் ஓட்டுநரின் ஸ்ரீ்நிவாஸை  போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via