நாளை வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

by Editor / 01-06-2022 03:17:28pm
நாளை வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் முதல் போக பாசனத்திற்காக நலை ஜூன் 2 முதல் தண்ணீர் திறப்பு.

ஜூன் 2 முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்தும் என மொத்தம் 120 நாட்களுக்கு மொத்தம் 6,739 மில்லியன் கனஅடி  தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

இதன் மூலம் பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில், முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

 

Tags :

Share via