தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்பணிகளை தொடங்கிவைத்து பணிநியமன ஆணைகளை வழங்குகிறார். 

by Editor / 19-05-2023 09:27:40am
 தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்பணிகளை தொடங்கிவைத்து பணிநியமன ஆணைகளை வழங்குகிறார். 

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ்கண்ட பணிகளை தொடங்கிவைத்து பணிநியமன ஆணைகளை வழங்குகிறார். 

(1) காவல் துறை சார்பில் செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

(2) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைத்திட காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

(3) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் நிறுவப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையங்களையும், துணை மின் நிலையங்களில் 853 எம்.வி.ஏ. அளவிற்கு திறன் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைக்கிறார்.

 

Tags :

Share via