சென்னையில் 28 ஆம் தேதி நடக்கும் விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்

by Editor / 20-07-2022 11:16:38pm
சென்னையில் 28 ஆம் தேதி நடக்கும் விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வரும் 28ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாகம், தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவில் மாணவர்களுக்கு  பட்டங்களை வழங்கும் பிரதமர், உரையும் நிகழ்த்துகிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரும் பங்கேற்கஉள்ளனர்.பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக ஏற்கனவே ஆளுநர் தரப்புக்கும், அரசு  தரப்புக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில்  சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஒரே மேடையில் கலந்துகொள்ளவுள்ள நிகழ்வு அரசியல் பார்வையாளர்கள் மத்தியில்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.மேலும் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியம் அன்றையதினம் தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக  எம்.பி.க்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினர். இதனைத்தொடர்ந்து  வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையம்  பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடப்பாதால் அரசுக்கும்,ஆளுநருக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளி நெருக்கத்தை ஏற்படுத்தும் களமாக அமையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

Tags : Prime Minister Modi will attend the celebrations in Chennai on the 28th

Share via