ஆர்பிதா முகர்ஜியின் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் விசாரணை
கொல்கத்தாவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு 29 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை கைப்பற்றிய ஆர்பிதா முகர்ஜியின் ராயல் ரெசிடென்சி குடியிருப்பில் மீண்டும் அமலாக்கத் துறையினர் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டனர். அங்கு விசாரணை நடத்தியதில் பணம் கொட்டி வைக்கப்பட்ட அந்த அறையை ஆர்பிதா தான் மூடி வைத்து இருப்பார் என்றும் யாரையும் அதன் அருகில் செல்ல அனுமதிக்க மாட்டார் என்றும் அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். இதனிடையே அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பார்த்தா சட்டர்ஜி நீக்கிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
Tags :