அதிகாரிகளை அலறவிட்ட ஆழ்துளை கிணறு

by Editor / 10-08-2022 11:58:26pm
அதிகாரிகளை அலறவிட்ட ஆழ்துளை கிணறு

வேலூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றை  குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வைரலான நிலையில் சிமிண்ட் கலவைக்குள் காணாமல் போகவைத்த ஆழ்துளை கிணற்றை  அதிகாரிகள் சரி செய்தனர்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் டூவீலரை அகற்றாமல் போடப்பட்ட சாலை. ஜீப்பை அகற்றாமல் போடப்பட்ட சாலை என வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மக்களிடையே பெரும் சர்ச்சைக்குள்ளானது. 

இந்த நிலையில், வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் பயன்பாட்டில் இருந்த ஆழ்துளை கிணற்றை  அகற்றாமலேயே அப்படியே புதைத்தவாறு கால்வாய் கட்டப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக அடிப்பம்ப்பை கழற்றி சரிசெய்து வருகின்றனர்.மேலும் அந்த பணிகளை செய்த ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ஆணையாளர் அசோக்குமார் ரத்து செய்து உத்திரவிட்டுள்ளார்.

அதிகாரிகளை அலறவிட்ட ஆழ்துளை கிணறு
 

Tags :

Share via