நாடு முழுவதும் கலவரம்.. பரபரப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை மத்திய அரசு இன்று சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது. மேலும், பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தவை பிறப்பித்தது. தொடர்ந்து பிஎப்ஐ-வின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியது. அதன் சமூகவலைதள பக்கங்களையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் அலுவலகங்களில் நடத்திய சோதனைக்கு பிறகு பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சங்கமாக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆங்காங்கு கலவரம் நடைபெற்று வருகிறது. பிஎப்ஐ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Tags :