புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.920 கிலோ புகையிலை பறிமுதல்

by Editor / 07-10-2022 11:15:55pm
 புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.920 கிலோ புகையிலை பறிமுதல்

தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவிபட்டினம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம்  மற்றும் சார்பு ஆய்வாளர் அமிர்தராஜ்  தலைமையிலான காவல்துறையினர் விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த தங்கம் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார்  4,61,000 ரூபாய் மதிப்பிலான 920 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தலைமறைவாக உள்ள சந்தான நல்ல ஜெகன் சிவன் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்..
 

 புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.920 கிலோ புகையிலை பறிமுதல்
 

Tags :

Share via