இறந்தவரின் கையெழுத்தை போட்டு ரூ.9 கோடி மோசடி

by Staff / 13-10-2022 12:49:43pm
இறந்தவரின் கையெழுத்தை போட்டு ரூ.9 கோடி மோசடி

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளராக இருந்த சைமன் சாக்கோ 2020-ல் காலமானார். இந்நிலையில், அவரது கையெழுத்தை போட்டு துணை மேலாளர் ஆனந்தன், ஹரிஹரன் ஆகியோர் பண மோசடி செய்துள்ளனர். இவர்கள் மீது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ. 9 கோடி கையாடல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் மோசடி செய்தது நிரூபணமாகியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் துணை மேலாளர் ஆனந்தன், ஹரிஹரன் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via