மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by Staff / 13-10-2022 03:18:43pm
மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மெட்ரோ ரெயிலுக்கான 3-வது வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான சுரங்கம் தோண்டும் பணி தொடக்க விழா இன்று மாதவரம் பால் பண்ணை பகுதியில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டார். அவர் மாதவரம் பால் பண்ணை பகுதியில் இருந்து புரசைவாக்கம் கெல்லீஸ் வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பாதையில் சுரங்கம் தோண்டுவதற்கான எந்திரங்கள் கடந்த ஜூன் மாதமே சென்னைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது.

 

Tags :

Share via