சாலையோரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

by Editor / 16-10-2022 07:43:05am
 சாலையோரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே சென்றுகொண்டு இருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் வளைவுகள் உள்ள பகுதி என்பதால், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

 

Tags :

Share via