வான்வழி தாக்குதலில் 60 பேர் பலி

by Staff / 25-10-2022 10:22:44am
 வான்வழி தாக்குதலில் 60 பேர் பலி

ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரின் கச்சின் மாநிலத்தில் கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழாநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள், அமைப்பினர், பொதுமக்கள் என 400 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென மியான்மர் ராணுவம் சார்பில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்து பிறகு நடைபெற்ற பெரிய மற்றும் முதல் வான் தாக்குதலாக இது கருதப்படுகிறது. ஆனால் இதுகுறித்து மியான்மர் ராணுவம் மற்றும் அரசு ஊடகங்கள் மவுனம் சாதித்து வருகின்றனர்.

 

Tags :

Share via