16 சிறுமியை காதலித்து திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை - பெயிண்டர் கைது
உடுமலைப்பேட்டையில் பெயிண்டிங் வேலை செய்து வரும் தொழிலாளி மணிகண்டன். இவர் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, இருவருக்கும் ஏற்பட்டமனக்கசப்பு காரணமாக சிறுமி பொள்ளாச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். சிறுமியை தேடி சென்ற மணிகண்டன் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு சிறுமி வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சிறுமியின் முகத்தை கிழித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமியின் உறவினர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்ளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்தனர். பின்பு, அவர் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :