கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

by Staff / 14-11-2022 01:50:35pm
கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது


மதுரை கூடல் புதூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் மெயின் ரோடு பகுதியில் உள்ள கார் ஷோரூம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் அமர்ந்திருந்த பாண்டியராஜன் என்ற வாலிபர் பிடித்து விசாரணை செய்தபோது அவரிடம் 50 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.அதனை தொடர்ந்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via