தண்டவாளத்தில் மாடு, ஆடு குறுக்கே வந்தால் அபராதம்

by Staff / 20-11-2022 03:43:16pm
தண்டவாளத்தில்  மாடு, ஆடு குறுக்கே வந்தால் அபராதம்

இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீபமாக பல வழித்தடங்களில் செயல்பட தொடங்கியுள்ளன. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதமடைகின்றன. கால்நடைகள் மோதலை தவிர்க்க வேலிகள், தடுப்பு சுவர்கள் அமைப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும் ரயில்களின் மீது ஆடு, மாடுகள் குறுக்கிட்டு மோதினால் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் துண்டு பிரசுரங்கம் வழங்கி வருகின்றனர்.

 

Tags :

Share via