கர்நாடகாவுக்கு விட்டுக்கொடுக்கவே மாட்டோம் தேவேந்திர ஃபட்னாவிஸ்

by Staff / 24-11-2022 12:19:22pm
கர்நாடகாவுக்கு விட்டுக்கொடுக்கவே மாட்டோம் தேவேந்திர ஃபட்னாவிஸ்

ஒரு மகாராஷ்டிரா கிராமம் கூட கர்நாடகாவுக்கு போகாது. பெல்காம்-கார்வார்-நிபானி உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் கிராமங்களையும் எங்கள் மாநிலத்துக்கு கொண்டுவர மாநில அரசு போராடும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா - கர்நாடகா எல்லைப் பிரச்சனை விவகாரத்தில் பாஜக ஆளும் மாநில முதல்வர்களான ஃபட்னாவிஸ் மற்றும் பசவராஜ் பொம்மை அரசுகள் மோதுகிறது. துணை முதல்வர் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று பொம்மை குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பிரச்னையில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆத்திரமூட்டும் வகையில் அறிக்கை விட்டதாகவும், அவரது கனவு ஒருபோதும் நனவாகாது என்றும், நாட்டின் நிலம், நீர், எல்லைகளை பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் பொம்மை கூறினார்.

இந்த மாநிலங்கள் உருவான காலத்திலிருந்தே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. எல்லையில் உள்ள 865 கிராமங்கள் மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா கோரியது, அதே நேரத்தில் கர்நாடகா 260 கிராமங்கள் கன்னடம் பேசும் மக்கள்தொகைக்கு உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via