வெடித்து சிதறிய பாய்லர் ஒருவர் பலி

by Staff / 13-12-2022 12:51:54pm
வெடித்து சிதறிய பாய்லர்  ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையத்தில் தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை இங்குள்ள பாய்லர் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர் பெயர் ராமன், அவருக்கு வயது 70 என தெரிய வந்துள்ளது. நிறுவனத்தின் உரிமையாளரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via