கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர்  24 மணி நேரத்தில் கைது.

by Editor / 16-01-2023 10:18:42pm
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர்  24 மணி நேரத்தில் கைது.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலச்செவலை சேர்ந்த கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி(55) என்பவர்  கடந்த 15 ஆம் தேதி  மேலச்செவல் நவநீத கிருஷ்ண கோவில் வளாகத்தினுள் வெட்டு காயங்களுடன் கிடந்தார்.அருகே உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு  108 ஆம்புலன்ஸ்  மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி காயம்பட்ட நபர் மருத்துவமனை செல்லும் வழியில்  இறந்துவிட்டதாக அவரின் மகன் நவநீத கிருஷ்ணன் என்பவர்  முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து  தகவலறிந்த  மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர் சம்பவஇடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட தனிப்படையினர் மற்றும் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு உத்தரவிட்டார்‌.

மேற்படி போலீசார் விசாரணையில்   மேற்படி இறந்தவர் நவநீத கிருஷ்ண கோவிலை சுத்தம்  செய்யும் பணி செய்துவருவதாகவும், அவ்வப்போது மேலச்செவலை சேர்ந்த இளைஞர்கள் அடிக்கடி கோவில்  காம்பவுண்டு சுவரில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களை அவதூறாக பேசி வந்துள்ளதால் மேற்படி கிருஷ்ணன்  அதனை தட்டி கேட்டுள்ளார். அந்த முன்விரோதத்தினை மனதில் வைத்து கொண்டு 15 ம் தேதி அன்று மேலச்செவலை சேர்ந்த  கொம்பையா (19), செல்லகுட்டி என்ற துரை(23),  பாலசந்துரு(23), பற்பநாதன்(19), அருண் இசக்கிபாண்டி(19), மாரியப்பன்(19) மற்றும் அய்யப்பன்(23) ஆகிய 7 பேர்  சேர்ந்து மேற்படி கிருஷ்ணன் என்ற கிட்டுசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இவர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 7 நபர்களையும்  24 மணி நேரத்திற்குள்  கைது செய்த போலீசாரை காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்.

 

Tags :

Share via