சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது
சபரிமலையில் மண்டல மகரவிளக்கு பூஜை நிறைவுபெற்றதை யொட்டி தற்போது நடைசாத்தப்பட்டது.மேலும் மகர விளக்கு பூஜைக்காக பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வந்த திருவாபரணங்கள் மீண்டும் அரண்மனைக்கு கொண்டு செல்லும் நிகழ்வானது நடைபெற்று வருகிறது. இந்த மண்டல - மகரவிளக்கு சீசனில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு அறிவிப்பு. சபரிமலை வரலாற்றில் இவ்வாண்டு அதிக பக்தர்கள் தரிசனம் செய்ததாக தகவல்.இனி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்..
Tags : சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது