மூன்று சகோதரிகள் தற்கொலை

by Staff / 20-01-2023 01:37:39pm
மூன்று சகோதரிகள் தற்கொலை

கர்நாடகாவில் ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்கூர் மாவட்டம், பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (24), பிந்து (21), சந்தனா (18) ஆகியோரின் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இவர்களது பாட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், மூவரும் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளனர். வியாழக்கிழமை, இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டின் மேற்கூரையை அகற்றி பார்த்தபோது, ​​மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

 

Tags :

Share via