கள்ளநோட்டு கடத்தலில் ஈடுபட்ட கொல்லிமலையைச் சேர்ந்த 3 பேர் கைது

by Staff / 28-01-2023 02:06:53pm
கள்ளநோட்டு கடத்தலில் ஈடுபட்ட கொல்லிமலையைச் சேர்ந்த 3 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் சிலர் கள்ள நோட்டினை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு மாற்றுபவர்களின் நடமாட்டததை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் கொல்லிமலை சோளக்காட்டை சேர்ந்தவர் செல்லத்துரை (45). இவரும் கொல்லிமலை எல்லக்கிராய்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் (42), புத்தூர்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (36) ஆகிய மூவரும், நேற்று முன்தினம் சேந்தமங்கலம் பயணியர் மாளிகை அருகே ஜீப்பில் வந்துள்ளனர். சிறிது நேரம் அங்கு நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இம்மூவரும் கள்ள நோட்டு கடத்துவதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் வந்த ஜீப்பை சோதனை செய்தனர்.அப்போது அவர்களது ஜீப்பில் ரூ. 7 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்கள் கொண்டுவந்தது கள்ள நோட்டா என்பது குறித்து, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர்கள் யாருக்காக இந்த பணத்தை கொண்டு வந்தார்கள்? இதற்கு முன் இவர்கள் மீது கள்ள நோட்டு மாற்றியது தொடர்பாக ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். "

 

Tags :

Share via