தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய திமுக பேரூர் கழகச் செயலாளர்.

by Editor / 11-02-2023 10:52:56pm
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய திமுக பேரூர் கழகச் செயலாளர்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளராக இருப்பவர் ஜெகதீஷ், இவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியின் கணவரான போஸ் என்பவர் கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளரான ஜெகதீஷ், தனது மனைவியின் உதடு அழகாக இருப்பதாக ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், இதே போன்று மாவட்ட கவுன்சிலராக உள்ள பெண் நிர்வாகிக்கும் இது போன்ற ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும் கூறி கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

 அதற்கு, பதில் ஏதும் பேசாமல் ஜெகதீஷ் அமைதியாக இருந்த சூழலில், 'உன் மனைவியை நான் தங்கை போல் நினைக்கிறேன், ஆனால் நீ என்னனா என் மனைவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புற ' என கூறியபடி நீ எல்லாம் மாவட்டச் செயலாளர் காரில் ஏறிக்கொண்டு சுற்றி திரிவது கட்சிக்கு அவப்பெயர், இனிமேல் மாவட்ட செயலாளர் காரில் ஏறுவதை நான் பார்த்தால் உன் காலை கண்டிப்பாக வெட்டுவேன் என பேசும் ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 குறிப்பாக, தென்காசி மாவட்ட திமுகவினர் பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கிவரும் சூழலில், மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ள தமிழ்செல்விக்கு, பேரூர் கழக செயலாளர் ஒருவர் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக கூறி அவரது கணவர் வசை பாடும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய திமுக பேரூர் கழகச் செயலாளர்.
 

Tags :

Share via