மதுரையில் 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை- மாநகர காவல்துறை.

by Editor / 25-02-2023 11:48:08pm
மதுரையில் 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை- மாநகர காவல்துறை.

மதுரையில் 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள்,ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவைகள்  நடத்த மாநகர காவல்துறை தடைவிதித்துள்ளது.
மதுரை மாநகர காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு நகரக் காவல் சட்டம் 1888 இன் பிரிவு 41 மற்றும் 41(A) இன் கீழ், ஆயுதம் ஏந்தியபடியோ, ஆயுதம் ஏந்தியவாறு அல்லது சீருடையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், ஒத்திகை, பயிற்சி அல்லது கூட்டத்தில் பங்கேற்பதைத் தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பொது அல்லது தனியார் இடமாக இருந்தாலும், மதுரை நகருக்குள் 15 நாட்களுக்கு இன்று முதல் 12.03.2023 அன்று வரை மதுரை நகருக்குள் எந்த இடங்களிலும் அனைத்து விதமான கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் போன்றவை தடை செய்யப்பட்டு உள்ளன.
இவற்றிற்ககு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அது நிராகரிக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via