6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்-குருகிராம் சாலையில் மங்கர் காவல் நிலையம் அருகே வேகமாக வந்த கனரக லாரி ஒன்று மாருதி ஆல்டோ கார் மீது பின்னால் மோதியது. இதனால், கார் கவிழ்ந்து பக்கவாட்டில் விழுந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த அனைவரும் பல்வாலைச் சேர்ந்தவர்கள் மற்றும் குருகிராமில் ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு திரும்பும் போது விபத்தில் இறந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்தில் பலியானவர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags :