ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

by Staff / 07-04-2023 01:39:45pm
ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலியை நியமனம் செய்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து தங்கம், வெள்ளி நகைகள், கைக்கடிகாரங்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை ஏலம் விட முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் விரைவில் ஏலம் விடப்படும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via