தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

by Admin / 11-04-2023 11:11:51am
தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

 தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது  இதை எதிர்த்து ஆர் .எஸ்.எஸ். அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கி இருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பாக,,தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று உச்சநீதிமன்றம் சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உறுதி செய்து ஆர் எஸ் எஸ் பேரணி தமிழ்நாட்டில் நடத்துவதற்கு தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கியதோடு  தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ,உச்சநீதிமன்றம்.

 

Tags :

Share via