கஞ்சா கடத்திய நபருக்கு பத்தாண்டு சிறை

by Staff / 16-05-2023 02:28:32pm
 கஞ்சா கடத்திய நபருக்கு பத்தாண்டு சிறை

திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தியவருக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த இனியவன். இவரை கஞ்சா கடத்திய வழக்கில் வடமதுரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததும். ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி இங்கு வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இந்த வழக்கு மதுரை முதன்மை அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் குற்றவாளி இனியவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி சிவ கடாட்சம் வழங்கினா

 

Tags :

Share via