மூளை வளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம்.ஒருவர் கைது.

by Editor / 20-07-2023 04:27:49pm
மூளை வளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம்.ஒருவர் கைது.

சேலம் அருகே உள்ளது கருப்பூர்இங்கு வசித்து வருபவர் உசேனாஇவரது அக்காள் நசீமா கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா நோயால் இறந்து விட்டார். தனால் நசீமாவின் மகள்கள் ஆயிஷா பானு (வயது 35 )மற்றும் நூர்ஜகான் ( வயது 31) ஆகியோரை வீட்டில் தங்க வைத்து உள்ளார் ஆயிஷா பானு.இவர்கள் இருவரும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள்.

நேற்று இரவு நூர்ஜகான் வீட்டுக்குஅருகில் உள்ள மனிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்று திரும்பி வந்தார். அப்போது இவரை அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவர் இருட்டான பகுதிக்கு நூர்ஜகானை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.இதனை அந்த வழியில் சென்ற ச பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சடைந்தனர். பின்னர் இது குறித்து உடனே கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நூர்ஜகான் உடனே சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு  சேர்க்கப்பட்டார் .இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதன் பேரில் மகளிர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இந்த விசாரணையில் நூர்ஜகானை , மணிகண்டன் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது  தெரியவந்தது. இதனையடுத்து நேற்று நள்ளிரவில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
மணிகண்டன் திருமணமானவர்.

 கூலி வேலைக்குச் சென்று வந்த மணிகண்டன்  வேலைக்கு ஏதும் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி  ஊர் சுற்றித்திரிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து மணிகண்டனிடம் காவல்துறையினரின் விசாரணை நடக்கிறது.இந்த சம்பவம் கருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via