நடைபாதையில்  தூங்கி  கொண்டிருந்த தம்பதியினரின் 6 மாத குழந்தை கடத்தல்.

by Editor / 25-07-2023 09:35:22am
நடைபாதையில்  தூங்கி  கொண்டிருந்த தம்பதியினரின் 6 மாத குழந்தை கடத்தல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி பேருந்து நிலையத்தின் வெளியே நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த வள்ளியூர் நரிக்குறவர் காலணி யை சேர்ந்த முத்துராஜா- ஜோதிகா தம்பதியின் 6 மாத (ஹரி- என்ற) ஆண் குழந்தை கடத்தபட்டுள்ளதாக அந்தத்தம்பதியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர்.மேலும் பெண் ஒருவர் குழந்தையை கடத்தி செல்லும் கட்சி அந்தப்பகுதியிலுள்ள ஒரு சிசிடிவி காமிராவில் பதிவானதாக கூறப்படுகிறது.அடிப்படையில் தனிப்படை போலீசார், ரயில் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல்நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via