தமிழ்நாட்டு மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர் - உதயநிதி

by Staff / 14-08-2023 02:58:23pm
 தமிழ்நாட்டு மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர் - உதயநிதி

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் மாணவன் ஜெகதீஸ்வரன் (19 வயது) நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மாணவனின் தந்தை செல்வசேகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாணவர்கள் எந்த தவறான முடிவும் எடுக்கக் கூடாது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தும். தமிழ்நாட்டு மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என திமிராக பேசியுள்ளார். இதில் இருந்தே அவரின் அறியாமை வெளிப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via