நாளை டெல்லி செல்லும் தமிழக எம்.பி.க்கள்
தமிழகத்தின் அனைத்துகட்சி எம்.பி.க்கள் குழு, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை காலை டெல்லி செல்ல உள்ளனர். காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகா விடாப்பிடியாக நடந்துகொள்வதால், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தவுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டமும் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :