கடலில் மூழ்கி பலியான 3 மாணவர்கள் குடும்பத்திற்கு தலா 2 இலட்சம் நிவாரணம்.
திருநெல்வேலி மாவட்டம் உவரி கடலில் குளிக்கச் சென்று மூழ்கி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சரின் இரங்கல் செய்தியில், 'திசையன்விளை கரைச்சுத்துப்புதூரைச் சேர்ந்த ஆகாஷ் (14), ராகுல்கண்ணன் (14), முகேஷ் (13) ஆகிய மூன்று பள்ளி மாணவர்களும் நேற்று கடலில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்' என கூறியுள்ளார்.
Tags :