விபத்தில் தந்தை மகன் பலி

by Staff / 29-08-2023 02:04:13pm
விபத்தில் தந்தை மகன் பலி

பொள்ளாச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை யில் டெம்போவின் மீது கார் மோதி விபத்தில் தந்தை மகன் சம்பவ இடத்திலேயே பலி. பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன், இவர் தன் சொந்த வேலை காரணமாக மனைவி மற்றும் மகன் மோகித் உடன் கோவை சென்று விட்டு இன்று காலைபொள்ளாச்சி நோக்கி வந்துள்ளார். அப்போது பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை வரும் கோவில்பாளையம் பகுதியில் வந்த டெம்போவின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் பரமேஸ்வரன் மற்றும் அவரது மகன் மோகித் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பரமேஸ்வரனின் மனைவி சித்ராதேவி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வந்த நிலையில் அவ்வழியில் வந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் இரு உடல்களையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் கார் விபத்தில் தந்தை மகன் உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via