செல்போன் பறிப்பு வடமாநில இளைஞரை விரட்டிபிடித்த மாணவர்கள்

by Staff / 30-08-2023 05:32:01pm
செல்போன் பறிப்பு வடமாநில இளைஞரை விரட்டிபிடித்த மாணவர்கள்

மதுரை மாநகரில் மிக முக்கியமான பேருந்து நிலையமாக உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் விருதுநகரை சேர்ந்த கருப்பையா, சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ரவி பேருந்துக்காக காத்திருந்த போது செல்போனை பறித்து தப்பி ஓடும் போது வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நான்கு இளைஞர்களை நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று ஒரு வரை மட்டும் பிடித்து பறித்து சென்ற செல்போனை மீட்டு தர்ம அடி கொடுத்தனர் இதனால் பலத்த காயம் ஏற்ப்பட்டது பிடிப்பட்ட கூட்டாளிகள் மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர் மேலும் பேருந்து நிலையத்தில் இருக்க கூடிய புறக்காவல் நிலையத்தில் பிடிபட்ட திருடனை ஒப்படைத்தனர்.அப்போது காவல் துறை விசாரனையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சான் என்றும் தெரிவந்தது.மேலும் அவனை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் மூன்று வட மாநில இளைஞர்கள் தப்பியோடியவர்களை விவரத்தை பிடிபட்ட திருடனிடம் திவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில் பரப்பான பேருந்து நிலையத்தில் வட மாநில இளைஞர்கள் செல்போனை பறித்து சென்றது பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

 

Tags :

Share via