தக்காளி வரத்து அதிகரித்ததால் ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் மற்றும் ஜூலை மாதங்களில் வரத்து குறைந்த காரணத்தினால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.220 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த 2 வாரங்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனையாகிறது. பல மாதங்கள் கடந்து இந்த விலை குறைவு மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை