ஆதிக்கவாதிகளை வீட்டுக்கு அனுப்பும் நாள் தொலைவில் இல்லை - உதயநிதி
அவதூறுகளை நம்பி களமிறங்கியிருக்கும் ஆதிக்கவாதிகளை, வீட்டுக்கு அனுப்பும் நாள் தொலைவில் இல்லை என்று அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், '9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாசிஸ்ட்டுகள் பொய்ச்செய்தியை கையில் எடுத்துள்ளார்கள். பாஜகவின் பொய் கூச்சல்களை புறந்தள்ளி, கழகப்பணி - மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி சமத்துவம் - சமூக நீதி காப்பதற்கான நம் பயணத்தை தொடருவோம். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை தலைமைக்கழகத்தின் ஆலோசனை பெற்று சட்டத்துறையின் உதவி பெற்று சட்டப்படி எதிர்கொள்வேன்' என குறிப்பிட்டுள்ளார்.
Tags :