மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்
உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கக்ரோலி பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் மகன் இல்லாத நேரம் பார்த்து மருமகளை அவரது மாமனார் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி கணவரிடம் கூறியபோது, தந்தை மீது குற்றம் சாட்டியதால் அப்பெண்ணை அடித்து உதைத்து வீட்டை விட்டு கணவர் வெளியே துரத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்களுடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து கணவன் மற்றும் மாமனார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :