பண்டிகைக்கால கூட்ட நெரிசலை சமாளிக்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

by Editor / 20-10-2023 08:32:27am
பண்டிகைக்கால கூட்ட நெரிசலை சமாளிக்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பண்டிகைக்கால  கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 21 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் ரயில் (16127), அக்டோபர் 22 அன்று குருவாயூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), அக்டோபர் 19 முதல் 24 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் நாகர்கோவில் விரைவு ரயில் (22668), அக்டோபர் 20 முதல் 25 வரை  நாகர்கோவிலில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் விரைவு ரயில் (22667) ஆகியவற்றில் கூடுதலாக தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags : தெற்கு ரயில்வே அறிவிப்பு

Share via