இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இது தொடர்பாக 6 நபர்களை பிடித்து மாம்பலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்திருந்தனர்.
Tags :