புதிய கல்லூரிகளை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் - அன்புமணி

by Staff / 16-11-2023 12:16:41pm
புதிய கல்லூரிகளை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் - அன்புமணி

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒவ்வொரு மாநிலத்திலும் 10 லட்சம் பேருக்கு அதிக அளவாக 100 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற ஆணைக்கு தடை விதிக்க வேண்டும். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via