ஐ. டி. ஊழியர் தற்கொலை.

by Staff / 17-11-2023 03:06:18pm
ஐ. டி. ஊழியர் தற்கொலை.

மதுரை வில்லாபுரத்தில் ஐ. டி கம்பெனியில் பணிபுரிந்து வந்த இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை வில்லாபுரம் பழனிமுத்து நகர் மணிகண்டன் தெருவை சேர்ந்த மோகனின் மகன் சரவண விக்னேஷ்(37) என்பவர் பெங்களூரில் உள்ள ஐ. டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளிக்கு ஊருக்கு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிக பணிச்சுமை இருப்பதாக சரவண விக்னேஷ் குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது அறையில் சரவண விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via