புழலில் இருந்து தப்பிய பெண் கைதி கைது

by Staff / 16-12-2023 01:07:17pm
புழலில் இருந்து தப்பிய பெண் கைதி கைது

புழல் சிறையில் இருந்து கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தப்பி ஓடிய பெண் கைதி ஜெயந்தி பெங்களூருவில் போலீசாரிடம் சிக்கினார்.தப்பி ஓடிய பெண் கைதியை பெங்களூரு விமான நிலையம் அருகே தனிப்படை போலீசார் பிடித்தனர். சிறையில் உள்ள பார்வையாளர்கள் அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஜெயந்தி 13ஆம் தேதி தப்பியோடிய நிலையில், சிறை வார்டன்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த இவர், தப்பியோடி பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்திருந்த நிலையில், தமிழக போலீசாரிடம் சிக்கினார்.

 

Tags :

Share via